தியானம் செய்வது எப்படி?Thianam
எளிய முறையில் தியானம் செய்வது
எப்படி?
அதிக வேலை
பளுவால் மனஅழுத்தத்திற்கு ஆளானவர்கள் தினமும் தியானம் செய்து வந்தால் அனைத்து விதமான
பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம்.
LIKE | COMMENT | SHARE | FORWARD | SUBSCRIBE | BELL
தியானம் என்பது அலைபாயும் நம் மனதை ஒருநிலை படுத்தும் நிலையே தியானமாகும் .தியானம் மனிதனை மலரைபோல் மென்மையாகவும் சிங்கத்தை போல் கம்பீரமாகவும் சூரியனை போல் பிரகாசமாகவும் வைத்திருக்கும்.
தியானம் பயிற்சி நேரில், தபாலில், ஆன்லைன் மற்றும்
whatsapp மூலமாகவும் அளிக்கப்படும். kaizala, imo,
&whatsapp: call :9442697902
தியானம்
செய்வதனால் மனிதனுக்கு பல்வேறு நன்மைகள் உள்ளது. ஒருவர் தினமும் பதினைந்து நிமிடங்களாவது தியானம் செய்வது நல்லது. காலையிலோ, மாலையிலோ எப்போது வேண்டுமானாலும் தியானம் செய்யலாம்
தியானம் செய்வது
எப்படி?
எளிய முறையில் தியானம் செய்வது எப்படி?
* உங்கள்
இஷ்ட தெய்வத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.
* தியானத்திற்காக
ஒரு நாளில் இரண்டு நேரங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். (எடுத்துக்காட்டாக காலை
5 அல்லது 6 மணி. மாலை 6.30 அல்லது 7.30 மணி) முடிந்தவரை குறிப்பாக அந்த நேரத்திலேயே
தியானம் செய்ய முயற்சி செய்யவும்.
* வீட்டில்
ஒரு இடத்தை தியானத்திற்காக தேர்ந்தெடுங்கள். அது அமைதியான இடமாக இருக்க வேண்டும்.
* அங்கு ஆசனத்தை
விரித்து அதில் அமரவும். தலை, கழுத்து மற்றும் முதுகெலும்பு நேராக இருக்கும்படி பார்த்துக்
கொள்ளவும். கைகள் மடி மீது இருக்கட்டும். கண்களை மூடிக் கொள்ளவும்.
* சூரியன்,
நிலவு, நட்சத்திரங்கள், மேகங்கள் எதுவும் இல்லாத பரந்த எல்லையற்ற ஆகாயம் மங்கிய ஒளியில்
இருப்பதாக சில நிமிடங்கள் கற்பனை செய்யவும். இது உங்கள் உடலையும், உள்ளத்தையும் தளர்த்தி
அமைதிப்படுத்த உதவும்.
* இப்போது
உங்கள் உணர்வு மையத்தை இதயத்திற்கு எடுத்து செல்லவும். அங்கு பன்னிரெண்டு இதழ்கள் கொண்ட
சிவப்பு தாமரையை அங்கு கற்பனை செய்யவும். உங்கள் இஷ்ட தெய்வம் அதில் உயிருணர்வுடன்
அமர்ந்திருப்பதை எண்ணவும்.
* இப்போது
உடல், அமைதியான மனம், நம்பிக்கை, பக்தி, விவேகம், ஆகியவற்றிற்காக பிராத்திக்கவும்.
* ஐந்து,
பத்து நிமிடங்கள் இஷ்ட தெய்வத்தை தியானிக்கவும். மனம் அங்கும் இங்கும் ஓடினாலும் அதை
இழுத்து வந்து இஷ்ட தெய்வத்திடம் நிறுத்தவும்.
* பின்பு
இஷ்ட தெய்வத்தின் நாமத்தை ஜபம் செய்யவும். உங்கள் இஷ்ட தெய்வம் ராமராக இருந்தால் “ராம,
ராம” என்று தொடர்ந்து ஜெபம் செய்யவும். குறைந்த
பட்சம் 108 முறையாவது ஜபம் செய்ய வேண்டும். அதிகமாக செய்ய விரும்பினால் அது 108 இன்
மடங்காக இருக்க வேண்டும்.


No comments:
Post a Comment